Orkut Gmail Calendar Documents Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
தினம் ஒரு பாடல்
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  3 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
AKR  
View profile  
 More options Oct 3 2009, 1:21 am
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Sat, 3 Oct 2009 01:21:08 +0530
Local: Sat, Oct 3 2009 1:21 am
Subject: தினம் ஒரு பாடல்

மாலை நேரம் வந்தாலே காதல் கொண்ட உள்ளங்களுக்கு மயக்கம் வரும் போலும்.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான் கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லை மலர்
மென் மாலை தோளசைய மெல்ல நட்ந்தததே
புன்மாலை அந்திப் பொழுது

எனும் நளவெண்பாப் பாடலில் புகழேந்திப் புலவர் மாலை நேரம் வந்தால் மன்மதனின் கணைகள் பாய்ந்து காதல் கொண்ட மாந்தர்க்கு உடலில் விரகதாபத்தால் ஒருவித மயக்கம் உண்டாவதாகக் கூறுகிறார்.

அம்மயக்க நிலை தீர்ந்து மனம் மகிழ்ச்சி கொள்ள ஒருவரை ஒரவர் சந்தித்து, ஒருவரோடு ஒருவர் கருத்தொருமித்து, காதல் உணர்வைப் பகிர்ந்து கொண்டு உறவாடுதல் மாலை நேரத்தில் இயலாதே, தனிமை கிடைக்காதல்லவா? அவ்வாறு தனிமை கிடைத்தாலும் இரவு வந்து வானில் நிலவு வந்தாலல்லவோ காதலை முழுமையாக அனுபவிக்க இயலும்.

காதல் உணர்வையும், பக்தியையும் வெளிப்படுத்த இசை பெரிதும் உதவுகிறது. பக்தியை வெளிப்படுத்துகையில் உள்ளம் உருகுகின்றது. காதலை வெளியிடுகையில் மனம் மயங்குகின்றது. இரண்டில் காதலே தன்னை மறந்த இன்ப நிலையைப் பெரிதும் ஏற்படுத்த வல்லது. அத்தகைய காதல் கீதத்தை இணைந்து பாடும் ஜோடியின் குரல்களும் மயக்கம் தருமளவுக்கு இனிமையாய் இருப்பின் இசை என்ற இன்ப வெள்ளத்துக்குப் பஞ்சமேது?

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/gulebagavali...

படம்: குலேபகாவலி
பாடியோர்: ஜிக்கி, ஏ.எம். ராஜா
இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

ஆஆ... ஆஆஆஆஆஆஆ ஆஆஆ..

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே
போடும் போர்வை தன்னாலே

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Oct 4 2009, 6:57 pm
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Sun, 4 Oct 2009 18:57:31 +0530
Local: Sun, Oct 4 2009 6:57 pm
Subject: தினம் ஒரு பாடல்

மாமேதைகள் பலர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் மனம் குதூகலிக்கிறது. தமிழ்த் திரையுலகில் நமது சிந்தையள்ளும் செந்தமிழ்ப் பாடல்களை இசை நயத்துடன் கதையில் வரும் சூழ்நிலைகளுக்கேற்ப இயற்றி, அவற்றுக்கு சிறப்பாக மெட்டமைத்துப் பாடி, அவற்றுக்கேற்ற பாவங்களுடன் திறம்பட நடித்து நாம் வாழ்வை உற்சாகமாகக்  கழிக்க உதவிடும் மேதைகள் பலருடன் நாம் வாழ்கிறோம்.

நடிக மாமன்னன் சிவாஜி கணேசனும் நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் நம் உள்ளங்களைக் கொள்ளையடிக்கும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றுள் இரு மலர்கள் திரைப்படம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மிகவும் சுவாரஸ்யமான ஆரோக்யமான திரைக் கதையமைப்புடன், நடிகர்கள் அனைவரின் வளமான நடிப்புத் திறனையும் முழுதும் வெளிக்கொணரும் வகையில் அமைந்த இப்படத்தில் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் பயிலும் நடிகர் திலகமும் பத்மினியும் சிலப்பதிகாரத்தில் கோவலன், மாதவி இருவர் பற்றிய ஒரு நாட்டிய நாடகம் நடத்துகின்றனர்.

பத்மினி மயில் தோகையை முதுகில் அணிந்து கொண்டு ஒரு மயில் போலவே துள்ளித் துள்ளி ஆடுகையில் உடன் நடிகர் திலகம் பாடுவதாக அமைந்த இப்பாடல், டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் தன் கணீரென்ற குரலில் பாட, திரை வானை ஒரு கலக்குக் கலக்கியது.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/iru-malargal...

படம்: இரு மலர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட - கலை
மானின் இனம் கொடுத்த விழியாட

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

மானின் இனம் கொடுத்த விழியாட - அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட - நல்ல

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் - நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்

தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்

பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Oct 4 2009, 1:03 am
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Sun, 4 Oct 2009 01:03:38 +0530
Local: Sun, Oct 4 2009 1:03 am
Subject: தினம் ஒரு பாடல்

மாலையில் மன்மதனின் மலர்க்கணைகளின் தாக்கத்தால் மயக்கமுற்று, இரவின் வருகைக்காக ஏங்கி, இரவிலே காதல் கதைகள் பேசி மயக்கம் தீர்ந்து, உறங்கி விழிக்கவும், கடமை வந்து கதவைத் தட்டுகையில் மனதில் சற்றுத் தடுமாற்றம். வாழ்வின் இன்னல்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடும் நேரம் வந்துவிட்டதே!

உலகம் எனும் போர்க்களத்தில் கடமை எனும் போர் புரியத் துணிவெனும் ஆயுதம் கொண்டு புறப்படுகையில், மனம் சாந்தியடைந்து நம்பிக்கையில் நிரம்ப இறைவனருளை வேண்டிப் பெறும் தருணம் வந்து விட்டது. இறைவன் உறைவது இசையிலல்லவோ?

கடமைகளை ஆற்றத் தேவையான சக்தியைத் தந்தருளி, வெற்றிக்கு வழி வகுக்க வேண்டி, உள்ளம் உருகிப் பாடித் துதித்தால் கருணை மழை பொழிந்து, சகல பயங்களையும் நீக்கி அருளும் கலியுகக் கடவுள் கந்தனேயன்றோ?

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/athisaya-thi...

படம்: அதிசயத் திருடன்
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி, கே பிரசாத் ராவ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா மாயை நீங்க வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே ஏ..ஏ... ஏ...
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில் சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா... ஹே சிவ பாலா.... தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google