Orkut Gmail Calendar Documents Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
தினம் ஒரு பாடல்
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  4 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
AKR  
View profile  
 More options Feb 9, 1:19 am
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Tue, 9 Feb 2010 01:19:29 +0530
Local: Tues, Feb 9 2010 1:19 am
Subject: தினம் ஒரு பாடல்

அன்பு நண்பர்களே,

ஒரு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தினம் ஒரு பாடல் தொடர்கிறது. இடைவெளி ஏற்படக் காரணம் சமீபத்தில் விளைந்த ஒரு நண்பனின் எதிர்பாராத மரணமும் அதனால் பிற நண்பர்களிடையே உண்டான ஆழ்ந்த வருத்தமு்மே. "இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?"

மனிதர் யாவர்க்கும் பொதுவில் உள்ள ஓர் பழக்கம் பிறருக்கு அறிவுரை வழங்குவதாகும். வழங்கும் அறிவுரை எதைப்பற்றியதாக இருப்பினும் அவ்வறிவுரையை நாம் முதலில் கடைபிடித்தல் அவசியம். அவ்வாறன்றிப் "பிறர்க்குபதேசம் தனக்கில்லை" எனும் போக்கில் நடந்துகொண்டோமேயானால் நாம் கூறும் அறிவுரையும் பயனற்றுப் போவதுடன் நம் மீது பிறர்க்குள்ள மதிப்பும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விடும்.

குறிப்பாகக் குழந்தைகளுக்கு நாம் அறிவுரைகளை வழங்குகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். இல்லாவிடில் அவர்களது மனம் கெட்டு அவர்கள் கட்டுப்பாடின்றித் தவறான பாதையில் செல்ல ஏதுவாகக்கூடும்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/nam-nadu/nal...

திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு
மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு
லாலாலலாலா லலலலாலலாலா
லாலாலலாலா லலலலாலலாலா
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

லாலலால லாலாலால லாலலா லா
லாலலால லாலலால லாலலாலலாலலா
லாலலால லாலாலால லாலலா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Feb 10, 3:19 am
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Wed, 10 Feb 2010 03:19:22 +0530
Local: Wed, Feb 10 2010 3:19 am
Subject: தினம் ஒரு பாடல்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான நமது நாட்டின் சுதந்திரம் வந்த பொழுது அது முழுமையான சுதந்திரமாக இருக்கவில்லை. நாடு மதக் கலவரத்தால் துண்டாடப் பட்டு பாகிஸ்தான் தனி நாடாக உருவானதன் விளைவாக இந்தியா எனும் பெயர் நாட்டுக்கு ஏற்படக் காரணமாயிருக்கும் சிந்து நதியும் அதனைச் சார்ந்த பகுதிகளும் பாகிஸ்தான் வசம் போய் விட்டன. அது போகட்டும், எஞ்சிய பகுதிகளாவது இந்தியாவிடம் முழுமையாகத் தங்கினவா எனில் இல்லை. இந்திய சீன யுத்தத்தின் விளைவாக திபெத் பகுதியும் அதனையொட்டிய கைலாஷ் மலைப் பகுதியும் சீனாவின் வசம் சென்றுவிட்டன. அதன் பின்னர் வெகு விரைவிலேயே காஷ்மீர் மாநிலத்தின் பெரும் பகுதி பாகிஸ்தான் வசம் போய் விட்டது.

இது போததென்று மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையே தலைநகரைப் பகிர்ந்து கொள்வதிலும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதிலும் எனத் தொடர்ந்து ஜீவ மரணபப் போராட்டங்கள் ஏற்பட்டு நாடு அமைதியை இழந்து இன்று இருக்கும் மாநிலங்களில் பல மேலு்ம் சிறு துண்டுகளாக உடையும் நிலை உருவாகி உள்ளது. இந்திய ஒருமைப் பாட்டுக்காகத் தன்னலம் கருதாது பாடுபடுவதாகப் பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் யாவரும் தாம் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுத் தங்கள் சுயநலத்தையே பெரிதும் பேணி வருகின்றனர். நாடு எங்கே போகிறதென்று நாமும் உணராமல் அடுத்த வேளை உணவைப் பற்றியும் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றியுமே எண்ணி மயங்கிக் கிடக்கிறோம்.

தேசிய ஒருமைப்பாடு குறித்து பாரதி கண்ட கனவு பகற்கனவாகாவே ஆகிவிட்டது. அக்கனவை நனவாக்க இனியாகிலும் நாம் பாடு படுவோமாகில் நாம் பிறந்த பொன்னாடு வளம் பெரும்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/kai-kodutha-...

திரைப்படம்: கைகொடுத்த தெய்வம்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Feb 11, 3:37 am
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Thu, 11 Feb 2010 03:37:57 +0530
Local: Thurs, Feb 11 2010 3:37 am
Subject: தினம் ஒரு பாடல்

"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே."

தான் விரும்புவனவற்றைத் தன் உடைமையாக்கிள் கொள்ள விழைவது மனிதனி சுபாவம். அவ்வாறு உடைமை கொண்ட பொருள் யாதாயினும் அதனைப் பிறர் வசம் செல்ல அனுமதியாத மனப்பான்மை எல்லா மனிதருக்கும் உண்டு. இது மமகாரம் எனும் குணமாகும். தான் விரும்பும் பொருள் ஒரு பெண்ணாக இருக்கையில் ஒரு ஆணுக்கு இத்தகைய தனது எனும் உணர்ச்சி அனைத்திலும் மேலோங்கியிருப்பது இயல்பு.

தான் விரும்பும் பெண்ணை வேறொருவன் கண்களால் ஏறெடுத்துப் பார்க்கவும் பொறுக்காத குணம் ஆணுக்குண்டு. இது போன்ற மமகார உணர்வு மேலோங்குவதால் பல ஆண்கள் மன இறுக்கம் கொண்டு வருந்துவதும் உண்டு. இத்தகைய பலஹீனத்தைத் தவிர்த்து இயல்பான உணர்வு கொள்ளப் பழகுவோருக்குக் காதல் இனிமையானதாகும். தன் காதலியின் மேல் தான் கொண்ட அளவிடற்கரிய ஈடுபாட்டை அவளிடம் வெளிப்படுத்த இத்தகைய இயல்பு நிலை கொண்ட காதலன் கையாளும் யுக்தி கவிஞரின் கற்பனையில் அழகுற வெளிப்படுகிறது, காத்திருந்த கண்கள் படத்தில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இடம்பெறும் காதல் காட்சியில்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/kathiruntha-...

திரைப்படம்: காத்திருந்த கண்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1962

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?
பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா?

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போலுன் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு - தமிழ்க்
காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம் - இந்த
மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Feb 12, 12:27 am
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Fri, 12 Feb 2010 00:27:04 +0530
Local: Fri, Feb 12 2010 12:27 am
Subject: தினம் ஒரு பாடல்

இவ்வுலகில் நாமனைவரும் நம் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பொருளீட்டுவதிலும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலுமே கழித்து வருகிறோம். நம் கன் முன்னரே நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் உட்பட ஏனையோர் யாவரும் ஒருவர் பின் ஒருவராக யமலோகத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைக் கண்ணாரக் கண்டும், நமக்கும் ஒரு நாளுண்டு எனும் உண்மையை உணர மறு்த்து, சுயநலவாதிகளாகவே வாழ்நாளைக் கழிக்கிறோம். நமது சுயநலத்தினால் பொதுநலம் பாதிக்கப்படுவதையும் பொருட்படுத்தாமல் பிறரை அலட்சியப் படுத்தி, நமது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு சமுதாயத்துக்குப் பல வகைகளிலும் தீங்கிழைக்கிறோம்.

எத்துணை பணமிருந்தாலும் ஒருவருக்கு ஒரு ஜாண் வயிறு கொள்ளுமளவுக்கே உணவுண்ண முடியும். அதுவும் வயதாக ஆக உணவு உண்ணும் அளவும் குறைந்து, உடல் தளர்ந்து, பல வியாதிகளுக்கு இடமளிக்கையில் சுவையான உணவு உண்ணுவதும் இயலாமல் போய், கஞ்சி குடித்துக் காலம் கழிக்கும் சூழ்நிலையும் நம்மில் பலருக்கு ஏற்படுகிறது. என்ன நிலை வந்துற்றாலும் நம் பணத்தாசை மட்டும் குறைவதே இல்லை.

சுயநலமென்னும் இத்தகைய மனோ வியாதியிலிருந்து மீண்டு, நம் வாழ்நாளில் மீதமிருக்கும் காலத்தையாகிலும் பிறர் நலம் பேணுவதிலும், இயற்கை வளங்கள் அழிவதால் இவ்வுலகம் எதி்ர்கொண்டிருக்கும் பேரழிவிலிருந்து உலகினையும் நமது வருங்கால சந்ததியினரையும் காப்பதிலும் செலவிடுதல் நலம்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/mugarasi/und...

திரைப்படம்: முகராசி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
அஅண்டு: 1968

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் - பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் தன் நோய் தீர்ர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா - உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google