Orkut Gmail Calendar Documents Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
தினம் ஒரு பாடல்
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  7 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
AKR  
View profile  
 More options Oct 5 2009, 12:54 pm
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Mon, 5 Oct 2009 12:54:06 +0530
Local: Mon, Oct 5 2009 12:54 pm
Subject: தினம் ஒரு பாடல்

பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். பணம் இல்லாதவன் பிணம் என்பார்கள். அத்தகைய பணத்தினால் கிடைக்கத்தக்க வசதிகளை அனுபவிக்க அடிப்படையில் ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைதல் அவசியம். பலர் வாழ்க்கைத் துணையைத் தேடுகையில் அதன் மூலமாகவே தனக்கு செல்வம் கிடைக்க வேண்டுமெனப் பெரும் முயற்சி செய்து அதற்கெனப் பல பொய்களை உரைத்து நாடகமாடுவதுண்டு.

அவ்வாறு பொய்யுரைத்துத் தேடிய துணை நிலைக்காது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே என்பது போல அப்பொய் வெளியாகி வாழ்வே நரகமாகிவிடும். அதன் பிறகு எத்துணை செல்வம் இருந்தாலும் பயனில்லை.

இவ்வுண்மையை மிகத் தெளிவாக விளக்கிய தமிழ்த் திரைப்படம் அவசரக் கல்யாணம். இப்படத்தில் செல்வச் சீமாட்டியான ரமாபிரபாவை மணந்து அதன்மூலம் செல்வந்ததனாகலாம் என்று மனக் கோட்டை கட்டும் நாகேஷ் அவளிடமும் அவள் தந்தையிடமும் தான் சூரக்கோட்டைஜமீன்தாரரின் மகன் என்று பொய்யுரைத்து அவசரமாக அவளை மணமுடிக்கிறார். பின் அவரது குட்டு வெளியாகி அவர்கள் இருவரும் படும் அவதியை விளக்குகிறது திரைப்படம். இப்படத்தில் பக்கோடா காதர் வி.கே. ராமசாமியின் மகனாக நடிக்கையில் தினமும் நடு இரவில், "நைனா பசி" என்று உரத்த குரலில் சப்தமிடுவது மிக வேடிக்கையாகப் படமாக்கப் பட்டுள்ளது.

நாகேஷ், ரமாபிரபா இருவரின் முதலிரவுப் பாடலாக ரமாபிரபா பாடுவதாக அமைந்த பி. சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலில் ஒலிக்கும் இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கத்தக்கது.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/avasara-kaly...

படம்: அவசரக் கல்யாணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: பி. சுசீலா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை - அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா - உங்க
தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் - பின்பு
தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Oct 6 2009, 5:47 pm
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Tue, 6 Oct 2009 17:47:43 +0530
Local: Tues, Oct 6 2009 5:47 pm
Subject: தினம் ஒரு பாடல்

கணவன் மனைவி உறவென்பது இருவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கு ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கையே அடிப்படை. அத்துடன் ஒருமித்த கருத்தும் உண்மை அன்பும் கொண்டு விளங்கினால் குடும்பமே கோவிலாகும். இடையே சந்தேகமெனும் சாத்தான் உள்ளே நுழைந்தால் நம்பிக்கை எனும் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு உறவு முறிந்து விடும், வாழ்க்கையே நரகமாகி விடும். இத்தகைய சந்தேகத்தைப் பிறர் மனதில் விதைப்பதையே நோக்கமாகக் கொண்டு பிறரை ஏமாற்றிப் பிழைப்போர் பலர் இவ்வுலகில் உளர்.

அத்தகைய விஷமிகளை அடையாளம் கண்டு, வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். எதனையும் சந்தேகக் கண் கொண்டு பாராமல் தெளிந்த அறிவுடன் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும். காமாலைக் காரன் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். அது போல சந்தேகக் கண் கொண்டு பார்த்தால் உண்மை விளங்காது.

"சம்சயாத்மா வினச்யதி" அதாவது, ஐயமுற்றோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான் என்று இறை பக்திக்காகச் சொல்லப் படும் வாக்கியமே குடும்ப உறவுக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில் அல்லவா?

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/deiva-piravi...

படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்

தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் -காதில்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்

தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Oct 8 2009, 12:11 am
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Thu, 8 Oct 2009 00:11:04 +0530
Local: Thurs, Oct 8 2009 12:11 am
Subject: தினம் ஒரு பாடல்

மனிதன் உயிர் வாழத் துணைபுரியும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் அவனது உள்ளமும் வளமாய் வாழ உறுதுணையாய் விளங்குவது இல்லம். இல்லம் சிறக்க சிறந்த இல்லத்தரசி வேண்டும். அவள் கணவனது மனதறிந்து அவனது அனைதது முயற்சிகளுக்கும் துணை புரிவதுடன் சந்ததி விளங்கத் தேவையான புத்திர சந்தானத்தைப் பெற்றுத் தந்து அவ்வாறு பெற்ற மக்களை சான்றோர்களாக வளர்க்கவும் கணவனுக்கு உதவி புரிவது அவசியம்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

என்று இரண்டடிகளில் வள்ளுவர் இத்னை விளக்குகிறார்.

அவ்வாறு தனக்காகவே வாழ்ந்து, தனது வாரிசுகளை ஈன்று, தன்னுடன் அவர்களையும் காப்பாற்றவென்றே வாழும் தன் மனைவியை ஒருவன் கண்ணெனப் போற்றி வாழ வேண்டும். அவளை விடுத்து பிற பெண்களை மனதாலும் தீண்டத் தகாது.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

என்று மஹாகவி பாரதியார் இதனை விளக்குகிறார்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/manmatha-lee...

படம்: மன்மத லீலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1976

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Oct 8 2009, 5:21 pm
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Thu, 8 Oct 2009 17:21:37 +0530
Local: Thurs, Oct 8 2009 5:21 pm
Subject: தினம் ஒரு பாடல்

தகுதியுள்ள ஓர் ஆடவனும் அவனுக்கேற்ற ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கையில் கண்களின் வழியாகவே தம் காதல் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்தல் மரபு. வாய் வார்த்தைகள் தேவையில்லை, காதல் கடிதமும் தேவையில்லை தூது போகத் தோழியும் தேவையில்லை.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல

என்று வள்ளுவர் இதனை உணர்த்துகிறார்.

கம்பர் எழுதிய ராமாயண காவியத்தில் மிதிலா நகரின் வழியே குரு விஸ்வாமித்திரருடனும் தம்பி இலக்குவனுடனும் சென்ற இராமன் உப்பரிகையில் நின்ற சீதையைக் காண, அவ்வாறு நின்ற சீதையும் ராமனைக் காண,

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்

என்று அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கண்ட மாத்திரத்திலேயே தம்மையறியாமல் உள்ளத்தே எழுந்த காதல் உண்ர்வுகளைப் பரிமாறிக் கொண்ட விதத்தை விளக்குகிறார்.

ஆனால் த்ற்காலத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் பார்க்கையில் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட போதிலும் பல காரணங்களால் மற்றவருக்குத் தன்மேல் உண்டான காதலை நிச்சயமாக உணர முடியாத நிலையில் குழம்புவதும் தவிப்பதும் சகஜம்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/irumbu-thira...

திரைப்படம்: இரும்புத் திரை
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எஸ்.வி. வெங்கடராமன்
பாடியோர்: பி. லீலா, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

ஓஓஓஓ ஓஓ ஆஆஆஆ ஆஆஆஆஆ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Oct 9 2009, 7:36 pm
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Fri, 9 Oct 2009 19:36:04 +0530
Local: Fri, Oct 9 2009 7:36 pm
Subject: தினம் ஒரு பாடல்

இராமாயணக் கதையில் இராவணனின் மகனான இந்திரஜித் தேவேந்திரனையே வென்றதனால் அப்பெயர் பெற்றான் எனவும், 14 ஆண்டுகள் தொடர்ந்து கண்ணுறங்காது தவ வாழ்க்கை வாழ்ந்த ஒருவனே அவனை வதம் செய்த இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளதாகக் கேள்விப் படுகிறோம். அதன் படியே இராமன் தந்தையின் ஆணைப்படி 14 ஆண்டுகள் வன வாசம் செய்கையில், கண்ணுறங்காது இராமனையும் சீதா பிராட்டியையும் கண்ணின் இமையெனக் காத்து வந்த இலக்குவன் கைகளால் இந்திரஜித் மடிந்ததாகக் கூறப் படுகிறது.

14 ஆண்டுகள் தூங்காமல் ஒருவனால் உயிர்வாழ முடியுமா எனும் கேள்வி எழுகிறது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தாய் காக் எனும் 64 வயதான விவசாயி ஒருவர் 1973ஆம் ஆண்டு முதல் முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறிதும் உறங்காது வாழ்வதாக ஒரு செய்தி:

http://www.tamilvanan.com/content/2009/08/10/old-man-goes-30-years-wi...

அது சரி. இவர்கள் ஆண்கள். கண்ணுறங்காத பெண் உலகில் உண்டோ?:

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/meenda-sorga...

துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

அழகான பழம் போலும் கன்னம் - அதில்
தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும்

துயிலாத பெண்ணொன்று கண்டேன் நானா? ஆமாம் - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை
மலருக்குப் பகையாக ஆனேன்
உறவோடு விளையாட எண்ணும் - கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே

துயிலாத பெண்ணொன்று கண்டேன் யாரோ? நீ தான் எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

மணமேடை தனில் மாலை சூடும் - உங்கள்
மன மேடை தனிலாட வேண்டும் - நெஞ்சம்
பிறர் காண முடியாத மேடை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை

துயிலாத பெண்ணொன்று கண்டேன் ஓஹோ எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Oct 11 2009, 11:18 pm
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Sun, 11 Oct 2009 23:18:48 +0530
Local: Sun, Oct 11 2009 11:18 pm
Subject: தினம் ஒரு பாடல்

நம் நாட்டுப் பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது மேனியை நன்கு மறைத்து, அதே சமயம் அலங்காரமாய் விளங்கும் அற்புதமான ஆடை அணிகலன்களும், அவர்களிடம் இயல்பாகவே வெளிப்படும் நாணமுமே ஆகும். நம் நாட்டுப் பெண் ஒருத்தி ஓர் ஆடவனிடம் காதல் கொண்டு பழகினாலும் தன் உள்ளத்தில் அவன் மேல் இருக்கும் ஆசையையும், தன் மேனி அழகையும் அவனுக்கும் கூடக் காட்ட மாட்டாள்.

இதற்கு மாறாக ஆடவர்கள் தம் மனதில் ஒரு பெண்ணின் மேல் காதல் ஏற்படுகையில் அதனை அப்பெண்ணிடம் தயங்காமல் எடுத்துச் சொல்லும் தைரியமும் அதே சமயம் அவளிடம் நெருங்கிப் பழகும் ஆசையும் மிகுந்தவர்களாக விளங்குவது இயற்கை.

தனது காதலி தான் அவள் மேல் கொண்ட ஆழமான காதலை அறிந்திருந்தும் தன்னுடன் நெருங்கிப் பழகாமலும் தன் மேல் அவளுக்குள்ள ஆசையை வெளிப்படுத்தாமலும், அவளது அழகைத் தான் ரசிக்க விடாமலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கக் கண்டு, அதனால் பரிதவிக்கும் தனது மனதின் நிலையை எடுத்துரைப்பது போல் அமைந்த அழகியதோர் பாடல்:

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/deivaththin-...

படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி? - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி? - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி?

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து - வாசல்
சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு - வாசல்
சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன் - எந்த
பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்? - எந்த
பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்?

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி?

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
AKR  
View profile  
 More options Oct 12 2009, 10:55 pm
From: "AKR" <akrconsulta...@gmail.com>
Date: Mon, 12 Oct 2009 22:55:38 +0530
Local: Mon, Oct 12 2009 10:55 pm
Subject: தினம் ஒரு பாடல்

காதல் இல்லாமல் உலகமில்லை, வாழ்வுமில்லை. காதலர் இருவர் கண்ணுடன் கண் நோக்கி, கருத்தொருமித்து விட்டால் வாழ்வில் அவர்களுக்கு இவ்வுலகைப் பற்றிய சிந்தனையில்லை, வேறெதைப் பற்றியும் சிந்தனையில்லை. அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் ஐக்கியமாகி விடுகின்றனர்.

அத்தகைய சங்கம நிலையில் அவர்கள் தங்கள் முகத்தைப் பார்ப்பதற்கு நிலைக்கண்ணாடி அவசியமற்றதாகிறது, ஏனெனில்  ஒருவரது முகமே மற்றவரது முகத்தையும் மனதையும் காட்டும் கண்ணாடியாகின்றது என்று நான் சொல்லவில்லை. தமிழ் மக்கள் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட கவிஞர் பட்டுக்கோட்டையார் சொல்கிறார். அவரது கருத்துக்கு மறுப்புண்டோ?

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/thanga-pathu...

படம்: தங்கப் பதுமை
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ், விஸ்வநாதன், டி.கே. இராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
ஆண்டு: 1959

முகத்தில் முகம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்

வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால் ஆ...
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என் முன்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம் - மானே உன்

முகத்தில் முகம் பார்க்கலாம்

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்

இளமை பொங்கும் அங்கம் சிந்தும் - அழகில்
தங்கம் மங்கும் நிலையில் - நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலென்னச் சோலைதனில்
பொழுதெலாம் மகிழலாம்
கலையெலாம் பழகலாம் சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்

முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google